Nov 07 2008

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

Tag: தமிழில் (in Tamil), SocietyKarthik @ 8:42 pm

என்னுடைய தமிழ் பதிவுகள் ஓடையின் மூலம் பார்க்கும் பொது சரியாக தெரிவதில்லை, ஆதலால் தயவு செய்து இந்தப் பதிவிலுள்ள தலைப்பை கிளிக் செய்து என் தளத்தில் போய் படிக்கவும்

என் தேசமே,

வளர்ந்த நாடுகளுக்கு குடிபெயர்ந்த உன் முன்னாள் குடிகளின் புகுந்த வீட்டு பாசம் என்னை நெகிழ வைக்கிறது.

அதில் ஒருவன் சொல்கிறான், அமெரிக்காவில் தேர்தல் நாளன்று தன் ஒவ்வொரு நண்பருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓட்டு போட செல்லுமாறு பிரச்சாரம் செய்தானாம். நல்ல சமூக உணர்வு தான். அனால் இந்த உணர்வு இந்தியாவில் இருக்கும் போது ஏன் இவனுக்கும் தோன்றுவதில்லை. உன்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்கு கூட செல்லாதவன், தான் குடியுரிமை பெற்ற நாட்டுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறான் பார்.

தான் பயன்படுத்திய டிஷ்யூ காகிதத்தை பயணம் செய்த அமெரிக்க விமானத்தில் போடாமல், மீனம்பாக்கம் சாலையோரத்தில் வீசி எறிபவன் தானே இவன்.

இவன் மட்டுமல்ல, இவனை பொருள் தேட அனுப்பும் இவன் பெற்றோர்கள் இரவு முழுக்க விழித்து அமெரிக்க தேர்தல் முடிவை பார்க்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் இந்தியத் தேர்தல்களில் வாக்களித்திருப்பார்கள் என்பது சந்தேகமே.
People watching US electoral results in Chennai

அடுத்த ஆண்டு GRE எழுத போகும் மாணவர்கள் கூட அமெரிக்க தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வங்காட்டுகிறார்கள்.

இவர்களுக்கு அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரை தெரிந்திருக்கிறது, ஆனால் பாவம் இந்திய துணை ஜனாதிபதி யாரென்று தெரியவில்லை. இவர்கள் இந்திய தேர்தல் அடையாள அட்டை வாங்கியதே விசா விண்ணப்பத்தில் இணைக்கத்தானோ?
Students posing with Obama cutout in Chennai

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவரிலிருந்து எடுத்த படங்களை பார்த்து பழகியவன், எங்கள் சந்திராயண் எடுத்தனுப்பிய கருப்பு வெள்ளை படத்தை பார்த்து ஏளனம் செய்கிறான்.

நாசாவில் இருக்கும் இந்தியர்கள் மட்டும் இங்கிருந்து தாய் நாட்டுக்கு சேவை செய்திருந்தால் செவ்வாய் என்ன, கருந்துகளுக்கே ரோவர் அனுப்பியிருக்கலாமே.

இப்படி அமெரிக்க வளர்ச்சிக்கு மூளைகளை உற்பத்தி பண்ணுவதே,
என் தாய் தேசமே, உன் வேலையாகி(சாபமாகி) விட்டது.

கிரீன் கார்டு கோட்டாவில் விடுபட்டவர்கள் தான்
உன் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டுமென்று தலைவிதி.

அமெரிக்கனாவது தன் பொருளை உன்னிடம் விற்று காசாக்குகிறான்.
ஆனால் நீ உருவாகிய மூளைகளை அவனிடம் கொடுத்து, என்ன பெறுகிறாய்?

அறிவாற்றல் மிகுந்த வியத்தகு மூளைகளை படைக்கத் தெரிந்த நீ
அவற்றிக்கு தேசப்பற்று ஊட்டத் தவறுவது ஏன்?

ஊரான் நாட்டை ஊட்டி வளர்த்தால்
நீ தானே வளர்ந்தது விடுவாய் என்ற எண்ணத்திலா?

என் கேரள நண்பன் ஒருவன் சொல்வான். கேரளா மக்கள் பெரிய உழைப்பாளிகள். எங்கு சென்றாலும் தன் உழைப்பினால் உயர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உழைக்கத் தயங்கும் ஊர் என்ன தெரியுமா? ….. கேரளம் தான். இது எல்லா இந்தியர்களுக்கும் பொருந்தும்.




Close
E-mail It